Posts

Showing posts from August, 2019

வீரட்டேஸ்வரர் திருக்கோவில்

Image
                                               உ                வீரட்டேஸ்வரர்  திருக்கோவில்                                  எரும்பூண்டி      சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா அருள்சோதியாக  நின்ற திருண்ணாயில் இருந்து அன்னை  அங்காளபரமேஸ்வரி சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம். கிராமத்தின் சிறப்பு:-     விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமத்தில் நாடகங்கள், பஜனை, கோலாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புற கலைகள் அடிக்கடி நடைபெறும். மற்றும் வரலாற்றின் பல சுவடுகளை தாங்கி நிற்கிறது இந்த கிராமம்.    1. ப ழமையான கோவில்கள்    2. கல்வெட்டுகள்    3. மாதம் ஒரு திருவ...